விருப்பமில்லா மணமேடை விரும்பியவளோடு
ஆரம்பம் கொஞ்சம் பிடிக்காம தான் படிக்க ஆரம்பித்தேன் கதை எப்படி தம்பியை காதலித்து குழந்தை இருக்க அண்ணன் கூட கல்யாணம் ஒரு மாதிரி இருந்தது கதை தொடர்ந்து படித்த போது அவர்களின் சுழ்நிலை புரிந்து அது தவறு இல்லை என்று புரிந்து கொண்டேன்
அவர்கள் இருவருக்கும் இருந்த பக்குவம் அருமை
மகி பண்ணது தவறு
சித்துவின் காதல் வலிகள் ஹரிணியின் வலிகள் எல்லாத்தையும் இருவரும் புரிந்துக் கொள்ளும் விதம் அருமை
மகியை பற்றியே நினைத்துக் கொண்டு இல்லாமல் நிதர்சனமான பெண் ஹரிணி தாலி கட்டியவனும் தன்னை காதலித்தை அழகாக புரிந்துக் கொண்டு அவனுடன் பழக்
- கியது ஹரிணியின் பக்குவம் அழகாக இருக்கு
தம்பியை காதலித்து குழந்தையுடன் நிற்பவளிடம் தன் காதல்லை சொல்லாமல் அவளின் உணர்வுகளை புரிந்து எற்ற சித்து அருமை
கடைசியாக இருவரும் காலம் அவர்களுக்கு மாற்றத்தை தரும் என்று முடித்தது செம
மொத்தமாக கதையை ஆசிரியர் எழுதிய விதம் சூப்பர்
Leave a reply
- 143 Forums
- 2,642 Topics
- 3,151 Posts
- 0 Online
- 2,166 Members
